Tamilnadu
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து : அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாட்டின் 78-வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு ஆளுநருடன் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே என் நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
Also Read
-
எஸ்.ஐ. கண்முன்னே பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்... த.வெ.க எம்.எல்.ஏ. அடாவடி - குவியும் கண்டனம்!
-
நுழைவுத் தேர்வு எந்த வடிவில் வந்தாலும் திமுக எதிர்க்கும்.. கலைஞரின் சட்டப் போராட்டம் (1): முரசொலி!
-
விஜய் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் கொடுத்த அடி : கரூர் நெரிசல்... அரசுப் பணி ரத்து!
-
த.வெ.க அரசின் 24 மணி நேர வேலை இதுதான் : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொல்வது என்ன?
-
மேகதாது அணை விவகாரம் - “லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இதெல்லாம் புரியாது” : ரகுபதி பதிலடி!