Tamilnadu
அதிவேகமாக வந்த கார் : நெடுஞ்சாலையில் தம்பதிக்கு நேர்ந்த துயர சம்பவம்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லதா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பனியில் வேலைபார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோகுலகிருஷ்ணன் மற்றும் தீபன்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஊத்துக்குளி அருகே கருணாம்பதி பகுதியில் சிவக்குமார் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று இரவு மனைவியுடன் கருணாம்பதியில் வீட்டு வேலைகளைப் பார்க்கச் சென்ற சிவக்குமார் அங்கேயே தங்கி விட்டு, இன்று காலை இருசக்கர வாகனத்தில் மனைவி லதாவுடன், புதுப்பாளையம் நோக்கி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் அவிநாசி - மங்கலம் நெடுஞ்சாலை சாலை அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார் தம்பதியர் சடலங்களை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் : நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
“இந்தித் திணிப்பைத் தமிழ்நாடு என்றைக்கும் எதிர்க்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
-
இந்தி தான் தேசிய மொழியா? - நடு மைதானத்தில் நடந்த காரசார விவாதம்... வர்ணனையாளர்களால் வெடித்த சர்ச்சை!
-
“இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்த சென்னை மாநகராட்சி” : தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!