Tamilnadu
அதிவேகமாக வந்த கார் : நெடுஞ்சாலையில் தம்பதிக்கு நேர்ந்த துயர சம்பவம்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லதா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பனியில் வேலைபார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோகுலகிருஷ்ணன் மற்றும் தீபன்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஊத்துக்குளி அருகே கருணாம்பதி பகுதியில் சிவக்குமார் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று இரவு மனைவியுடன் கருணாம்பதியில் வீட்டு வேலைகளைப் பார்க்கச் சென்ற சிவக்குமார் அங்கேயே தங்கி விட்டு, இன்று காலை இருசக்கர வாகனத்தில் மனைவி லதாவுடன், புதுப்பாளையம் நோக்கி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் அவிநாசி - மங்கலம் நெடுஞ்சாலை சாலை அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார் தம்பதியர் சடலங்களை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பா.ஜ.க-வை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? : விஜய்க்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி!
-
பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: சுரேஷ் ரெய்னா வருகையா? தடாலடியாக இறங்கிய முன்னாள் வீரர்கள்!
-
“தந்தை பெரியாரின் படத்தை அகற்றியதற்காக அ.தி.மு.க வெட்கப்பட வேண்டும்” : அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம்!
-
கொளத்தூரில் ரூ.11.88 கோடியில் மூத்த குடிமக்கள் உறைவிடம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
சென்னையில் ரூ.33.85 கோடி செலவில் புதிதாக 11 முதல்வர் படைப்பகங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!