Tamilnadu
”கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் திராவிட மாடல் அரசு” : திண்டுக்கல் ஐ.லியோனி பெருமிதம்!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பள்ளிகளுக்கு இடையேயான ’தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் துவக்க விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தமிழோடு விளையாடு சீசன் 2 நிகழ்வை துவக்கிவைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கலைஞர் தொலைக்காட்சி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழோடு விளையாடு நிகழ்ச்சி முதல் சீசனில் 32 வாரம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. மொழியை வைத்து பெயர் வைக்க கூடிய ஒரே மொழி தமிழ்தான்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி,”திராவிட மாடல் அரசின் 3 ஆண்டு காலம் பள்ளி கல்வித்துறையின் பொற்காலம்.இல்லத்திற்கே கல்வியை கொண்டு சென்று கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது தி.மு.க அரசு.
தமிழ்மொழியை மேலும் வளர்க்க கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!
-
ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையை மோடியும், ஆர்.என்.ரவியும் படிக்க வேண்டும் ; முதலமைச்சர் அட்வைஸ்!
-
ரூ.61.79 கோடியில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.13.36 கோடியில் 28 புதிய திட்டங்கள் : 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
-
யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம்! மௌனம் காக்கும் ஒன்றிய அரசு!