Tamilnadu
”ஏழை எளிய மக்களுக்காக உழைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம்!
சென்னை, கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 2022ஆம் ஆண்டில் 480 மாணவர்களுக்கும், 2023 ஆம் ஆண்டில் 685 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார்.
இதற்கு முன்னதாக இந்நிகழ்வில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ”தமிழ்நாட்டில் உள்ள மாணவக் கண்மணிகளே.. உழைப்புக்கு வடிவமாய் தலைமைப்பண்புக்கே எடுத்துக்காட்டாய் திகழும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உங்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தது எல்லாம் ஏழை மக்களின் உயிர்துடிப்புதான். சதாசர்வகாலமும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். கோவில் என்பது அன்னசத்திரத்தற்கு மட்டுமல்ல அறிவு ஆலயத்திற்கும் தான் என மாற்றிக்காட்டியவர். அறிவாலயத்திலிருந்து புறப்பட்ட நம் முதலமைச்சர். அதனால்தான் அவர் மனிதநேயமிக்க மக்கள் முதல்வராக திகழ்கிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!