Tamilnadu
ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற திருப்பூர் பாஜக நிர்வாகி... தட்டி தூக்கிய போலீஸ்!
திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீநகர் மெயின் வீதி வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்திலிருந்த ஏடிஎம் இயந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. கடந்த 20ஆம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர் ஹாலோ பிளாக் கல்லை வைத்து இயந்திரத்தை உடைத்து ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள சாதனத்தை சேதப்படுத்தியும் பணத்தை திருடவும் முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். தொடர்ந்து பல்வேறு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் குற்ற செயலை செய்தவர் கண்டறியப்பட்டார்.
அதன்படி அவர் திருப்பூர் அவிநாசிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்ட பிரச்சார அணி செயலாளர் முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து பாஜகவினால் அடிதடி பெண்கள் மீது வன்முறையை ஏவுதல் திருட்டு செயல் என குற்ற செயல்களில் ஈடுபடுவது தமிழ்நாடு முழுவதும் இருந்து வருகின்ற நிலையில் குறிப்பாக திருப்பூரில் தொடர் கதை ஆகிவிட்டது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!