Tamilnadu
நிபா வைரஸ் எதிரொலி - ”கேரளாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம்” : கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 14 வயது சிறுவன் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 350 பேரின் தொடர்புகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழநாட்டிற்கு வரும் பயணிகளின் உடல் வெப்ப பிரிசோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி கோவை மண்டலத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் தங்கள் கல்லூரியின் மாணவர்கள் கேரளாவிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு” கல்லூரி நிறுவனங்களுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!