Tamilnadu
நிபா வைரஸ் எதிரொலி - ”கேரளாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம்” : கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 14 வயது சிறுவன் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 350 பேரின் தொடர்புகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழநாட்டிற்கு வரும் பயணிகளின் உடல் வெப்ப பிரிசோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி கோவை மண்டலத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் தங்கள் கல்லூரியின் மாணவர்கள் கேரளாவிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு” கல்லூரி நிறுவனங்களுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!