Tamilnadu
நிபா வைரஸ் எதிரொலி - ”கேரளாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம்” : கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை!
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 14 வயது சிறுவன் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 350 பேரின் தொடர்புகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ்நாட்டு சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழநாட்டிற்கு வரும் பயணிகளின் உடல் வெப்ப பிரிசோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ”கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவிவரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி கோவை மண்டலத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் தங்கள் கல்லூரியின் மாணவர்கள் கேரளாவிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு” கல்லூரி நிறுவனங்களுக்கு உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!