Tamilnadu
பெட்டிக்கடையில் ரூ.15000 பணம் பறிப்பு : பா.ஜ.க நிர்வாகி கைது!
கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் பா.ஜ.க முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராகவும் இருந்து உள்ளார்.
இந்நிலையில் பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனக் கூறி பெருமாள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேரூர் படித்துறை அருகே உள்ள பெட்டிக்கடை வைத்துள்ள வெற்றிவேல் என்பவரிடம் குட்கா விற்பனை செய்வதாக பொய் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார். பின்னர் அவரிடம் ரூ. 15,000 பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் அவர் மீது சந்தேகம் அடைந்த வெற்றிவேல், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் பா.ஜ.க நிர்வாகி பெருமாளை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!