Tamilnadu
”விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் அண்ணாமலை” : ஜோதிமணி MP குற்றச்சாட்டு!
ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் பின்னணியில் இருப்பது பா.ஜ.க தலைவர் அண்ணாமலைதான் என ஜோதிமணி MP குற்றம்சாட்டியுளளார்.
இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி MP,”பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமோ, அரசியல் முதிர்ச்சியோ கிடையாது. அரசியல் கட்சி தலைவர்கள் மீது சேற்றை அள்ளி வீசுவது மட்டுமே அவரது வேலை. மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது கிடையாது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கு என்பது சட்டப்படி மிக கடுமையான குற்றச்சாட்டு. ரூ.100 கோடி அளவில் நில மோசடி செய்துள்ளார்.இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தலைமறைவு பின்னணியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைதான் இருக்கிறார்” என தெரிவிதுள்ளார்.
Also Read
-
”ஆதாரை ஏற்கத் தடுப்பது எது?” : தலைமை தேர்தல் ஆணையருக்கு 7 கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
செய்தியாளர்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட சீமான் : பொதுக்கூட்டத்தில் நடந்த பரபரப்பு!
-
”திமுகவையும் மாணவர்களையும் என்றைக்குமே பிரிக்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
11 ஆண்டுகள் ஆனபிறகும் வார்த்தைகளில் ‘வடை’ சுடும் மோடி : முரசொலி கடும் தாக்கு!
-
"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !