Tamilnadu
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை : 8 பேரை கைது செய்தது தனிப்படை போலிஸ்!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, சம்பவத்தன்றும் அங்கு சென்று பார்வையிட்டு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். பிறகு ரத்தக் காயத்துடன் இருந்த அவரை அங்கிருந்த நபர்கள் மீட்டு சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனும்தித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை வடக்கு மண்டல கூதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில், 10 அதிதீவிர தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ் மற்றும் அருள் ஆகிய 8 பேரை அதிதீவிர தனிப்படை போலீசார் கைது செய்ததுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!