Tamilnadu
’மருத்துவச் சுற்றுலா மாநாடு’ : அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சுற்றுலாத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
1.அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவாலயப்பகுதி, சிவகங்கை மாவட்ட பிரான்மலை பகுதி, திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி மற்றும் தெற்கு கள்ளிக்குளம் தேவாலயப்பகுதி, தூத்துக்குடி மாவட்டம் கழுமலை ஆகிய வழிபாட்டு சுற்றுலாத்தலங்களில் அடிப்படை வசதிகள் ரூ.8.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
2.தமிழ்நாட்டில் கிராமிய சுற்றுலா மற்றும் வன்நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை ரூ.50 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.
3. கடற்கரை பகுதிகளில் ரூ.6.50 கோடியில் வளச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. அவதானப்பட்டி ஏரி, புங்கனூர் ஏரி, தாமரைக்குளம் ஏரியில் படகு குழாம் மற்றும் இதர சுற்றுலாப் பணிகள் ரூ.5.70 கோடியில் மேற்கொள்ளப்படும்.
5. கிராமியச் சுற்றுலா மையங்கள் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்படும்.
6. கோயம்புத்தூரில் பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சுற்றுலா மாநாடு ரூ.1 கோடியில் நடத்தப்படும்.
7.நீர் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பணிகளுக்கு ரூ.1 கோடி செலவிடப்படும்.
8.புதுப்பட்டினம் கடற்கரை, பழவேற்காடு ஏரிப்பகுதிகளில் சுற்றுலாப் பெருந்திட்டம் ரூ.1 கோடியில் தயாரிக்கப்படும்.
9. கிராமிய சுற்றுலா, வான்நோக்கு சுற்றுலா ஆகியவை மேம்படுத்துவதற்கு சாத்தியக்கூறு அறிக்கை ரூ.50 லட்சம் செலவில் தயாரிக்கப்படும்.
10, ரூ.10.20 கோடியில் சுற்றுலாத் தலங்களுக்கான அருவிகளில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!