Tamilnadu
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!
அண்மையில் நடந்த நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளது. நீட் தேர்வை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்ட வந்ததில் இருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் கோரிக்கையை நாடே பிரதிபலித்து வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நீட் தேர்வு பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்த தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் பயனடையும் வகையில் இத்தேர்வு உள்ளது.
மாநிலங்கள் நுழைவுத் தேர்வு நடத்தும் முறையை மாற்றி தன்னிச்சையாக நீட் தேர்வை கொண்டு வந்தது கூட்டாட்சிக்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!