Tamilnadu
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!
அண்மையில் நடந்த நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை அடுத்து நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளது. நீட் தேர்வை ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்ட வந்ததில் இருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் கோரிக்கையை நாடே பிரதிபலித்து வருகிறது.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நீட் தேர்வு பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்த தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் பயனடையும் வகையில் இத்தேர்வு உள்ளது.
மாநிலங்கள் நுழைவுத் தேர்வு நடத்தும் முறையை மாற்றி தன்னிச்சையாக நீட் தேர்வை கொண்டு வந்தது கூட்டாட்சிக்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!