Tamilnadu
11 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பா.ஜ.க : தமிழ்நாடு திராவிட மண் என்பதை மீண்டும் நிரூபதித்த மக்கள்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி புதுச்சேரி உள்ளிட்டு 40 தொகுதிகளில் போட்டியிட்டு 40க்கு 40 வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
தி.மு.க கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிகள் படுதோல்வி அடைந்துள்ளன. மேலும் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.
குறிப்பாக நாங்கள்தான் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி என்று வாய் சவடால் விட்ட பா.ஜ.க 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ், சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினி, கரூர் வேட்பாளர் செந்தில்நாதன், நாகப்பட்டினம் வேட்பாளர் ரமேஷ்கோவிந்த், நாமக்கல் வேட்பாளர் ராமலிங்கம், பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர், தஞ்சாவூர் வேட்பாளர் முருகானந்தம், திருப்பூர் வேட்பாளர் முருகானந்தம், திருவள்ளூர் வேட்பாளர் பாலகணபதி, திருவண்ணாமலை வேட்பாளர் அசுவதாமன், விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகிய 11 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
அதேபோல் கோவை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வாக்குச்சாவடியில் வெறும் 1 ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 312 வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!