Tamilnadu
கொலை மிரட்டல் : கந்துவட்டி வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது!
சென்னை புளியந்தோப்பு 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் மாஜர்கான். இவர் புளியந்தோப்பு நரசிம்ம நகர் 5 ஆவது தெருவை சேர்ந்த அஞ்சலை என்பவரிடம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 40% வட்டிக்கு 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் மாஜர்கான், மாதம் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீதம் 5 மாதம் 8 லட்சம் பணம் கட்டியுள்ளார். இருப்பினும் அஞ்சலை மேலும் தனக்கு ரூ. 9 லட்சத்து 50 ஆயிரம் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு ’வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் கட்டிவிட்டேனே மீண்டும் ஏன் பணம் கொடுக்க வேண்டும்’ என கேட்டுள்ளார். இதையடுத்து அஞ்சலை அவரது வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாஜர்கான் இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் அஞ்சலை மீது வழக்கு பதிவு செய்து அஞ்சலையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஞ்சலை பாரதிய ஜனதா கட்சியில் வடசென்னை மேற்கு மாவட்ட மகளீர் அணி செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.`
Also Read
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!