Tamilnadu
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் இணைந்து பல்வேறு ஆளுமைகளின் சொற்பொழிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தி வருகிறது. பொன்மாலைப் பொழுது என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஶ்ரீதேவன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது, "பெண்கள் வெளியில் சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், வீட்டு வேலையில் எந்த பங்களிப்பையும் செய்வதில்லை. இந்த மனநிலை மாற வேண்டும். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மா இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்;இது தவறானது.
வீட்டு பொறுப்பை, வேலைகளை செய்யும் பெண்களுக்கு மாத சம்பளம் என்று எதையும் நிர்ணயிக்க முடியாது. அவர்களின் உழைப்பும் அக்கறையும் விலைமதிப்பற்றது. நாட்டில் நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் கெட்டவர்களும் இருக்கிறார்கள். மற்ற துறைகளில் இருந்தாலும் நீதித்துறையில் இருப்பது வருத்தத்திற்குரியது. இந்த நிலை மாற வேண்டும்" என்றார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!