Tamilnadu
தருமபுரியில் 30 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : தமிழ்நாட்டில் தகிக்கும் கோடை வெப்பம் !
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதோடு தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் நீற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை அதன் உச்சநிலையை எட்டியது.
தர்மபுரியில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி 41.4℃ வெப்பம் பதிவாகியிருந்தது. இதுதான் இதுவரை தர்மபுரியில் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இருந்த நிலையில் இன்று 42.5℃ வெப்ப பதிவான வெப்பம் பதிவாகி வரலாற்றில் இல்லாத புதிய அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
அதே போல சேலத்தில் 42.2℃ வெப்பம் பதிவானது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 44.3 ℃ வெப்பம் பதிவானது. அதனை அடுத்து சென்னை நுங்கம்பாக்கம் 100.22°F, சென்னை மீனம்பாக்கம் 104°F, கோயம்புத்தூர் 103.1°F, தர்மபுரி 108.5°F, ஈரோடு 111.2°F, காரைக்கால் 100.58°F, மதுரை நகரம் 107.6°F, மதுரை விமான நிலையம் 107.06°F, நாகப்பட்டினம் 102.2°F, நாமக்கல் 107.6°F, பாளையங்கோட்டை 104.9°F, சேலம் 107.96°F, தஞ்சாவூர் 104°F, திருப்பத்தூர் 107.96°F, திருச்சிராப்பள்ளி 108.86°F, திருத்தணி 108.14°F, வேலூர் 109.76°F வெப்பமானது பதிவாகியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!