Tamilnadu
நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை : ஈரோடு மாவட்டத்தில் கொதிக்கும் வெப்பம் !
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரோடு,வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 100 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. அதன் உச்சமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெப்பநிலை 109.4° பதிவாகியுள்ளது. இது நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் இரண்டாவது அதிகபட்ச அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று பகல்நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில், அதிகபட்சமாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும், ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் 110.8° பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்துள்ளது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!