Tamilnadu
நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை : ஈரோடு மாவட்டத்தில் கொதிக்கும் வெப்பம் !
இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரோடு,வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 100 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. அதன் உச்சமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெப்பநிலை 109.4° பதிவாகியுள்ளது. இது நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் இரண்டாவது அதிகபட்ச அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று பகல்நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில், அதிகபட்சமாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும், ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் 110.8° பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்துள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !