Tamilnadu
தொடர்ச்சியாக தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை : காவல்துறையினருடன் வாக்குவாதம்!
நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை மக்களவை தொகுதிக்குட்ட ஆவாரம்பாளையத்தில் இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி மூலம் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அண்ணாமலை தொடர்ச்சியாக இரவு 10 மணிக்குமேல் பிரச்சாரம் மேற்கொள்வதை வாடிக்கையாக்கி வருகிறார். இந்நிலையில், கோவை காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி நேற்று இரவு 10 மணிக்குமேல், பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைக் கண்ட காவல்துறையினர், அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருடன் அண்ணாமலை வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
பின்னர், அங்கிருந்து வந்த அண்ணாமலை இருகூர் பிரிவில் பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், அண்ணாமலை மீது, தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இரண்டு பிரிவின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!