Tamilnadu
'Quota-வுல நான் படிக்கல' : தினமும் வாய் கூசாமல் பொய் பேசும் அண்ணாமலை!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நான் வாய் திறந்தாலே பொய் மட்டும்தான் பேசுவேன் என்பதைத் தினமும் நிரூபித்து வருகிறார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் வெட்கமே இல்லாமல் இஷ்டத்திற்குப் பொய் மூட்டைகளைக் கட்டவிழ்த்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணம் திராவிட அரசுகள்தான் என்று பா.ஜ.க தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேசி இருக்கிறார்.
இவர் இப்படி பேசியதை அடுத்து அண்ணாமலை மண்டைக்குள் கொஞ்சமாவது மூளை இருக்குமா? அல்லது களிமண்தான் இருக்கிறதா? என கோவை தொகுதி மக்களே கேள்விகளை கேட்கத் தொடங்கி விட்டனர்.
தற்போது மீண்டும் தனது பொய் மூட்டையிலிருந்து மற்றொரு பொய்யை வெளியே எடுத்துள்ளார். அது, இடது ஒதுக்கீட்டில் நான் படிக்கவில்லை என கூறி இருக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், 2010 ஆம் ஆண்டு IPS பணியில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தவர்தான் இந்த அண்ணாமலை. இந்த உண்மையை மறைத்துத்தான் அண்ணாமலை தற்போது பொய் பேசி இருக்கிறார்.
Also Read
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!
-
தமிழ்நாட்டு விவசாயிகள் நாக்பூரில் கைது.. நடுவழியில் ரயிலில் இருந்து இறக்கம் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!