Tamilnadu
'Quota-வுல நான் படிக்கல' : தினமும் வாய் கூசாமல் பொய் பேசும் அண்ணாமலை!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நான் வாய் திறந்தாலே பொய் மட்டும்தான் பேசுவேன் என்பதைத் தினமும் நிரூபித்து வருகிறார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் வெட்கமே இல்லாமல் இஷ்டத்திற்குப் பொய் மூட்டைகளைக் கட்டவிழ்த்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணம் திராவிட அரசுகள்தான் என்று பா.ஜ.க தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பேசி இருக்கிறார்.
இவர் இப்படி பேசியதை அடுத்து அண்ணாமலை மண்டைக்குள் கொஞ்சமாவது மூளை இருக்குமா? அல்லது களிமண்தான் இருக்கிறதா? என கோவை தொகுதி மக்களே கேள்விகளை கேட்கத் தொடங்கி விட்டனர்.
தற்போது மீண்டும் தனது பொய் மூட்டையிலிருந்து மற்றொரு பொய்யை வெளியே எடுத்துள்ளார். அது, இடது ஒதுக்கீட்டில் நான் படிக்கவில்லை என கூறி இருக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால், 2010 ஆம் ஆண்டு IPS பணியில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தவர்தான் இந்த அண்ணாமலை. இந்த உண்மையை மறைத்துத்தான் அண்ணாமலை தற்போது பொய் பேசி இருக்கிறார்.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!