Tamilnadu
சூடுபிடித்த தேர்தல் களம் : தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்தியா கூட்டணி தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன், வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி, காஞ்சிபுரம் வேட்பாளர் க.செல்வம், சேலம் வேட்பாளர் செல்வகணபதி, திருவண்ணாமலை வேட்பாளர் சி.என். அண்ணாதுரை, வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ,திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம், மதுரை சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன், விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார், இராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !