Tamilnadu
சூடுபிடித்த தேர்தல் களம் : தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!
தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்தியா கூட்டணி தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன், வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி, காஞ்சிபுரம் வேட்பாளர் க.செல்வம், சேலம் வேட்பாளர் செல்வகணபதி, திருவண்ணாமலை வேட்பாளர் சி.என். அண்ணாதுரை, வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ,திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம், மதுரை சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசன், விழுப்புரம் விசிக வேட்பாளர் ரவிக்குமார், இராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Also Read
-
வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
-
"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?