Tamilnadu
தி.மு.க கூட்டணி : மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்றே அழைக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அண்மையில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு MP தலைமையில் பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டது. இக்குழு கூட்டணி கட்சிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !