Tamilnadu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : சீர் வரிசையோடு தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திமுக தொண்டர்கள், இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு கழக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதோடு இரத்த தானம், அன்னதானம் உள்ளிட்டவையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இணையத்திலும் முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதையை செலுத்தினர். தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்புகளை சந்தித்து வாழ்த்து பெறுவதோடு அவர்கள் வழங்கும் அன்பு பரிசுகளையும் பெறுகிறார்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் சீர் வரிசையோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வருகைத் தந்துள்ளனர்.
Also Read
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!
-
“தொகுதி மறுவரையறையை நிச்சயம் எதிர்ப்போம்! அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
“எல்லாவற்றிலும் வெற்றி, வெற்றி என்று சேர்த்துவிட்டால் வெற்றி பெற்று விட முடியாது!” : முரசொலி தலையங்கம்!