Tamilnadu
’வாசிக்கலாமா’ : சென்னை மாநகராட்சியின் அசத்தலான திட்டம் : அது என்ன?
கல்விக்கு என்று தனிக்கவனம் செலுத்தி சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னையில் பாழடைந்த பள்ளிகள் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு அப்பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையத்தை அமைக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக எம்.ஆர்.எப் பூங்கா, எம்.எம்.டி.ஏ பூங்கா, கே.கே.ஆர் கார்டன், அன்சா கார்டன், ஜீவா பூங்கா, ராகவேந்திரா பூங்கா, மே தின பூங்கா உள்ளிட்ட 10 பூங்காக்களில் இந்த திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ராயபுரத்தில் உள்ள ராகவேந்திரா பூங்காவில் புத்தக வாசிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் புத்தக மையத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்து சிறிது நேரம் படித்துச் செல்கிறார்கள்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!