Tamilnadu
மோசமாகிவிட்டது இந்து முன்னணி அமைப்பு : உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை!
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே பெண் காவலர் ஒருவர் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி ரோந்து பணியிலிருந்தார். அப்போது ரயில்வே காவல்துறையினர் குடியிருப்பு அருகே உள்ள கோயில் முன்பு மூன்று பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இதைபார்த்த பெண் காவலர் அவர்களிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது அவர்கள் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து பெண் காவலர், காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பிறகு அங்கு வந்த போலிஸார், மூன்று பேரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போதுதான் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் குபேந்திரன், அவரது சகோதரர் மற்றும் முத்தமிழ் செல்வன் என தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் இந்து முன்னணி என்றால் முன்பு மிகுந்த மரியாதை இருந்தது. தற்போது இந்து முன்னணி மோசமாகிவிட்டது என நீதிபதி வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!