Tamilnadu
மோசமாகிவிட்டது இந்து முன்னணி அமைப்பு : உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை!
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே பெண் காவலர் ஒருவர் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி ரோந்து பணியிலிருந்தார். அப்போது ரயில்வே காவல்துறையினர் குடியிருப்பு அருகே உள்ள கோயில் முன்பு மூன்று பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இதைபார்த்த பெண் காவலர் அவர்களிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது அவர்கள் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து பெண் காவலர், காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பிறகு அங்கு வந்த போலிஸார், மூன்று பேரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போதுதான் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் குபேந்திரன், அவரது சகோதரர் மற்றும் முத்தமிழ் செல்வன் என தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் இந்து முன்னணி என்றால் முன்பு மிகுந்த மரியாதை இருந்தது. தற்போது இந்து முன்னணி மோசமாகிவிட்டது என நீதிபதி வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!