Tamilnadu
தி.மு.க இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு : இன்றே விழாக்கோலம் பூண்டுள்ளது சேலம்!
தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று சேலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு மாநாட்டுத் திடலுக்கு வருகை சந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அப்போது விண்ணைப் பிளக்க வாழ்த்து முழக்கங்கள் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க இளைஞர் அணியின் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க இளைஞரணியின் மாநாட்டுத் தீப ஒளி சுடரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பிறகு மாநாடு திடலில் இந்த தீப ஒளி சுடர் ஏற்றப்பட்டது.
பின்னர் தி.மு.க இளைஞரணியின் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி 13 நாட்கள் 8647 கிலோ மீட்டர் பயணித்து இன்று சேலம் மாநாட்டுத் திடலுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தி.மு.க இயக்கத்தின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியை அடுத்து திராவிட இயக்கத்தின் வரலாற்றை மெய்சிலிர்க்க வைத்த ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1500 ட்ரோன்கள் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் வானில் ஜொலித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!