Tamilnadu
உலக முதலீட்டாளர்கள் மாநாடு : மாற்றுத்திறனாளிகள் & LGBTQ-க்கு 5% வேலைவாய்ப்பு - Godrej நிறுவனம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றும், நாளையும் (7,8.01.2024) ஆகிய 2 நாட்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் என மொத்தம் 35 நாடுகளில் இருந்தும் டாப் தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதே இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், இது அதற்கு புள்ளியாக அமையவுள்ளது.
தொடர்ந்து இன்று நடைபெற்ற மாநாட்டில் Tata, Godrej, Mitsubishi, TVS, Vinfast உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கோடி கணக்கில் தமிழ்நாட்டில் முதலீடு மற்றும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த சூழலில் இதில் கோத்ரெஜ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்திருக்கிறது.
அதாவது செங்கல்பட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பம் ஆனது. இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்திருக்கிறது.
அதன்படி இன்று நடைபெற்ற உலக முதலீட்டார்கள் மாநாட்டில், இந்த ஆலையில் 50% பெண்களுக்கும், 5% LGBTQ (மாற்று பாலினத்தவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா அறிவித்துள்ளார்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!