Tamilnadu
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுமார் 8 வயது மதிக்கத்தக்க 3 சிறுமிகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றள்ளார்.
பிறகு அங்கு மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இருப்பினும் சிறுமிகள் இது குறித்து தங்களது பெற்றோரிடம் கூறினர்.
இதன் பின்னர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோரும் குழந்தைகள் நல அமைப்பினரும் ஊட்டி ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலிஸார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்தியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக்திக்கு தலா 7 ஆண்டுகள் என 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4500 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜாமினில் வெளியே இருந்த, சக்தியை போலிஸார் கோவை மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.
Also Read
-
RGNIYD நிறுவனத்தில் RSS தலைமையைக் கொண்டுவர சூழ்ச்சி : விடுதலை நாளேடு எச்சரிக்கை!
-
”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!
-
”பா.ஜ.க.வின் தோல்வி தவிர்க்க முடியாதது” : காரணத்தை பட்டியலிட்ட அகிலேஷ்!
-
”காங்கிரஸ் வென்றால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” : மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் பாஜக!
-
அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு !