Tamilnadu
தீபாவளி பண்டிகை - ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பு : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணைய அலுவலகத்தில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் செல்வதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு இதேபோன்று கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆம்னி உரிமையாளர்களிடம் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி 25% கட்டணம் குறைக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு மேலும் 5% குறைக்கப்பட்டு 30% கட்டணம் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 30% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!