Tamilnadu
மலேசியா TO சென்னை... சோதனையில் சிக்கிய தலைமறைவு கேரள குற்றவாளி.. விமான நிலையத்தில் அதிரடி கைது !
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரவித் சாஜன் (35). இவர் மீது எர்ணாகுளம் போலீசில், இந்த ஆண்டு தொடக்கத்தில், போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீசார் பிரிவித் சாஜனை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக தேடினர்.
ஆனால் அவர் போலீசில் சிக்காமல் தப்பி, மறைவாகிவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர், பிரவீத் சாஜனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல் ஓ சி போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை பரிசோதித்து, அனுப்பி கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே இதே விமானத்தில், கேரள மாநிலம் எர்ணாகுளம் போலீசால் தேடப்படும், தலைமறைவு குற்றவாளியான பிரவித் சாஜனும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள், கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, இவர் எர்ணாகுளம் போலீசார் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதை அடுத்து அவரை வெளியில் விடாமல் பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
அதோடு எர்ணாகுளம் போலீஸ் கமிஷனருக்கு, தேடப்படும் தலைமறைவு குற்றவாளி பிரவித் சாஜன், மலேசியா நாட்டிலிருந்து விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார் என்ற தகவலையும் அனுப்பினர். இதை அடுத்து கேரள மாநில தனிப்படை போலீசார், பிரவித் சாஜனை கைது செய்து, எர்ணாகுளம் கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
Also Read
- 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!