Tamilnadu
வில்வித்தையில் உலக சாதனை படைத்த 11ம் வகுப்பு மாணவி: ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்திய திமுக!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷினி. 11ஆம் வகுப்பு படித்து வரும் இவர் தனது சிறு வயதிலிருந்தே வில்வித்தை போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகிறார்.
இந்த வெற்றி உற்சாகத்தை அடுத்து ஒரு மணிநேரத்தில் தொடர்ச்சியாக 713 வில் அம்புகளை எய்து உலக சாதனை படைத்துள்ளார் சிறுமி ஹர்ஷினி. மேலும் சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.
தனது ஏழ்மையைப் பொருட்படுத்தாமல் வில்வித்தையில் உலக சாதனை படைத்த ஹர்ஷினிக், புதிய வில் அம்பு வாங்கவும் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ. 1 லட்சம் தி.மு.க குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன் வழங்கினார். இதையடுத்து நிதியுதவி வழங்கியதற்கு மாணவி ஹர்ஷினி நன்றி தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!