Tamilnadu
நிபா வைரஸ்.. தமிழ்நாட்டில் 6 மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் இரண்டு பேர் உயிரிழந்த சூழ்நிலையில் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கோழிக்கோட்டுப் பகுதியில் தீவிரமான கண்காணிப்பு பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கேரளாவை ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று கூடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்துவதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் இருக்கக் கேரள எல்லைப் பகுதியைக் கொண்ட 6 மாவட்டங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழியாக வரும் பயணிகளுக்கு ஆய்வு செய்த பின்னரே தமிழ்நாட்டுப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர் காய்ச்சல் அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தொற்று இல்லை. மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!