Tamilnadu
நடுரோட்டில் கிளம்பிய புகை.. பற்றியெரிந்த பைக்.. குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்லும்போது அதிர்ச்சி !
சென்னை பல்லாவரம் அடுத்த அனாகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்கள் அந்த பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து தினமும் ஸ்டீபன்தான் குழந்தைகளை வீட்டு அழைத்து வருவார் என்று தெரிகிறது.
இந்த சூழலில் அதே போல் சம்பவத்தன்றும் பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பம்மல் பிரதான சாலையில் திடிரென அவர் சென்றுகொண்டிருந்த பைக் நின்றுள்ளது. இதனால் வண்டியை மீண்டும் இயக்க முயன்றார். அப்போது வண்டியில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது.
புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்டீபன், உடனடியாக தனது பிள்ளைகளுடன் வாகனத்தில் இருந்து இறங்கி சிறிது தூரம் நகர்ந்து விட்டார். அவர் சென்ற சில மணி துளிகளிலேயே அந்த வண்டி பற்றியெரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் கொளுந்து விட்டு தீ எரிந்ததால், வண்டி முழுவதுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!