Tamilnadu
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
சிவகங்கை மாவட்டம், சூரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணபதி மற்றும் பிரபு. வாலிபர்களான இவர்கள் இருவரும் கடந்த 2011ம் ஆண்டு ஆடு மேய்க்க சென்ற 12 வயது சிறுமியை ஏமாற்றி மது மற்றும் பிரியாணி ஆகியவை வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது பற்றி சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் மீதான போக்சோ வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கணபதி மற்றும் பிரபு மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அதன் மீது நீதிபதி சரத் ராஜ் தீர்ப்பு வழங்கினார்.
இதில் கணபதி மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் தால 20 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?