Tamilnadu
12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
சிவகங்கை மாவட்டம், சூரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணபதி மற்றும் பிரபு. வாலிபர்களான இவர்கள் இருவரும் கடந்த 2011ம் ஆண்டு ஆடு மேய்க்க சென்ற 12 வயது சிறுமியை ஏமாற்றி மது மற்றும் பிரியாணி ஆகியவை வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது பற்றி சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் மீதான போக்சோ வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கணபதி மற்றும் பிரபு மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அதன் மீது நீதிபதி சரத் ராஜ் தீர்ப்பு வழங்கினார்.
இதில் கணபதி மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் தால 20 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !