Tamilnadu
குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள்.. கடல் அலையில் சிக்கி பரிதாப பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்!
திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை அருகே நவ்வலடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராகுல், முகேஷ், ஆகாஷ். இந்த மூன்று சிறுவர்களும் அருகே உள்ள கடற்கரைக்குக் குளிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் மாயமாகி உள்ளனர். இதுபற்றி அறிந்த உடனே கடலோர காவல் குழுவினர் மீட்புப் பணி மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சபாநாயகர் அப்பாவு இரவு நேரத்திலும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார். இரவு முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலையில் நவ்வலடி அருகே உள்ள கோடாவிளை என்ற இடத்தில் ஆகாஷ் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு சிறுவர்களின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் முகேஷின் உடலும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குளிக்கச் சென்ற மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !