Tamilnadu
உறவினர் வீட்டிற்கு சென்றபோது விபரீதம்: கணவன் கண்முன்னே மனைவிக்கு நடந்த கொடூரம்!
சென்னை அடுத்த பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது கணவர் சின்னையா தணியார் நிறுவனம் முன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தம்பதியினர் திருமுடிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த மாடு மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நாகம்மாள் சாலையில் விழுந்துள்ளார்.
அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி நாகம்மாள் மீது ஏறியதில் அவரது தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன் கண்முன்னே மனைவி உயிரிழந்ததை பார்த்து கணவர் கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் உயிரிழந்த நாகம்மாள் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தொழிலாளர் ஓய்வு இல்லங்களை திறந்து வைத்த அமைச்சர் சி.வி.கணேசன்!
-
தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு... குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை... மகளிர் நீதிமன்றம் அதிரடி!
-
இவ்வளவு வசதிகளா... தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்த உயர் சிறப்பு மருத்துவமனை!
-
மகளிர் தினம் : “தமிழ்நாட்டோட இலட்சிய கனவை நீங்கதான் நிறைவேற்ற போறீங்க..” - முதலமைச்சர் சொன்ன செய்தி!