Tamilnadu
சென்னையில் நடு ரோட்டில் பற்றி எரிந்த விலை உயர்ந்த BMW கார்.. பதறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி விலை உயர்ந்த BMW காரை பார்த்தசாரதி என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். இவர் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது.
உடனே பார்த்தசாரதி காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து இவர் வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பதறியடித்து ஓடியுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தாம்பரம் சானடோரியம் தீயணைப்புத் துறைக்கும் மற்றும் போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
ஆனால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விலை உயர்ந்த கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!