Tamilnadu
சென்னையில் நடு ரோட்டில் பற்றி எரிந்த விலை உயர்ந்த BMW கார்.. பதறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
சென்னை பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி விலை உயர்ந்த BMW காரை பார்த்தசாரதி என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார். இவர் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்றபோது திடீரென காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது.
உடனே பார்த்தசாரதி காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பிறகு காரில் இருந்து இவர் வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பதறியடித்து ஓடியுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தாம்பரம் சானடோரியம் தீயணைப்புத் துறைக்கும் மற்றும் போலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
ஆனால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விலை உயர்ந்த கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!