Tamilnadu
”தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வேலைகள் எடுபடாது”.. அமலாக்கத்துறை சோதனைக்கு கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு!
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை மூக்கை நுழைத்துள்ளது.
மேலும், வழக்குத் தீர்ப்பை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது. இது எதிர்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகும். பா.ஜ.க-வின் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கொண்டு ஊழலை பா.ஜ.க எதிர்கிறது என்பது போன்று கட்டமைக்கப்படுகிறது. ஆனால் எத்தனையோ பா.ஜ.க அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் மீது இதுவரை நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!