Tamilnadu
”தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வேலைகள் எடுபடாது”.. அமலாக்கத்துறை சோதனைக்கு கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு!
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை மூக்கை நுழைத்துள்ளது.
மேலும், வழக்குத் தீர்ப்பை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது. இது எதிர்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகும். பா.ஜ.க-வின் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கொண்டு ஊழலை பா.ஜ.க எதிர்கிறது என்பது போன்று கட்டமைக்கப்படுகிறது. ஆனால் எத்தனையோ பா.ஜ.க அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் மீது இதுவரை நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!