Tamilnadu
”தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வேலைகள் எடுபடாது”.. அமலாக்கத்துறை சோதனைக்கு கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு!
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை மூக்கை நுழைத்துள்ளது.
மேலும், வழக்குத் தீர்ப்பை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரசியல் உள்நோக்கத்துடன் ஒன்றிய பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது. இது எதிர்கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகும். பா.ஜ.க-வின் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளைக் கொண்டு ஊழலை பா.ஜ.க எதிர்கிறது என்பது போன்று கட்டமைக்கப்படுகிறது. ஆனால் எத்தனையோ பா.ஜ.க அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் மீது இதுவரை நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!