Tamilnadu
”அமலாக்கத்துறை சோதனைகளை கண்டு தி.மு.க கிஞ்சிற்றும் கவலைப்படாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. முதற்கட்டமாக ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் ஒற்றுமையுடன் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திப்பது என அனைத்து கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர். மேலும் ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதையடுத்து எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது.இதில் 24 எதிர்கட்சிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்கட்சிகளின் கூட்டம் பா.ஜ.கவுக்கு மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய வெளிப்பாடுதான் அமலாக்கத்துறை சோதனை. வடமாநிலங்களின் செய்ததுபோல் இப்போது தமிழ்நாட்டிலும் செய்கிறது பா.ஜ.க இந்த சோதனைகளை கண்டு எல்லாம் பா.ஜ.க கிஞ்சிற்றும் கவலைப்படாது.
13 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா தொடுத்த பொய் வழக்கில் தற்போது சோதனை நடத்தப்படுகிறது. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்தது. அப்போது எல்லாம் விட்டுவிட்டு இப்போது வந்து சோதனை செய்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கு எல்லாம் மக்கள் பதில் சொல்லத் தயாராகி விட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!