Tamilnadu
'ரூ.10 ஆயிரம் கொடு'.. விவசாயியிடம் மாமூல் கேட்ட பா.ஜ.க நிர்வாகி - கைது செய்த போலிஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அடுத்த தும்மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தியாகதுருவம் பேருந்து நிலையம் அருகே தனக்குச் சொந்தமான இடத்தில் கடை ஒன்றை கட்டி வருகிறார்.
அதேபோல் தியாகதுருவம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத பாண்டியன். இவர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவராக உள்ளார். இவர் ஏழுமலையிடம் இங்குக் கடை கட்ட வேண்டும் என்றால் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதற்கு ஏழுமலை, எனது சொந்த இடத்தில் நான் கடை கட்டுவதற்கு உங்களுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டு காசு எல்லாம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுநாத பாண்டியன், ஏழுமலையைத் தாக்கி அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதையடுத்து ஏழுமலை இது குறித்து தியாகதுருவம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து பா.ஜ.க நிர்வாகி ரகுநாத பாண்டியனை போலிஸார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தியாகதுருவம் பகுதியில் விவசாயி கடை கட்டுவதற்கு மாமூல் கேட்டு பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!