Tamilnadu
'ரூ.10 ஆயிரம் கொடு'.. விவசாயியிடம் மாமூல் கேட்ட பா.ஜ.க நிர்வாகி - கைது செய்த போலிஸ்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அடுத்த தும்மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தியாகதுருவம் பேருந்து நிலையம் அருகே தனக்குச் சொந்தமான இடத்தில் கடை ஒன்றை கட்டி வருகிறார்.
அதேபோல் தியாகதுருவம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத பாண்டியன். இவர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவராக உள்ளார். இவர் ஏழுமலையிடம் இங்குக் கடை கட்ட வேண்டும் என்றால் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதற்கு ஏழுமலை, எனது சொந்த இடத்தில் நான் கடை கட்டுவதற்கு உங்களுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டு காசு எல்லாம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகுநாத பாண்டியன், ஏழுமலையைத் தாக்கி அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதையடுத்து ஏழுமலை இது குறித்து தியாகதுருவம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து பா.ஜ.க நிர்வாகி ரகுநாத பாண்டியனை போலிஸார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தியாகதுருவம் பகுதியில் விவசாயி கடை கட்டுவதற்கு மாமூல் கேட்டு பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!
-
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டி கொலை : கம்மல் கொள்ளை - நாகர்கோவில் அருகே கொடூரம்!
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!