Tamilnadu
மகன் இறப்புச் செய்தியைக் கேட்டு தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.. குடும்பத்தை உலுக்கிய சோக சம்பவம்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பாலவேடு - காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் அசோக்குமார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் அசோக்குமார் கடந்த 2ம் தேதி நண்பரை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாக்கம் பகுதியில் சென்றபோது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் அசோக் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அசோக்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் குறித்து அவரது தந்தைக்குத் தெரிவித்துள்ளனர். மகன் இறப்புச் செய்தியைக் கேட்டு மாரடைப்பால் தந்தை குப்பன் உயிரிழந்தார். தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!