Tamilnadu
'வா செல்ஃபி எடுக்கலாம்'.. ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு நண்பர்களுக்கு நடந்த சோகம் சம்பவம்!
திருப்பூர் மாவட்டம், அணைப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே 2 இளைஞர்களின் சடலங்கள் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்தது. பின்னர் அங்கு சென்ற போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த வாலிபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், விஜய் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருப்பூரில் தங்கி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ரயில் தண்டவாளம் அருகே நின்று ரயில் வரும் போது செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இவர்கள் மீது ரயில் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. செல்ஃபி எடுக்கும் போது ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!