Tamilnadu
'வா செல்ஃபி எடுக்கலாம்'.. ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு நண்பர்களுக்கு நடந்த சோகம் சம்பவம்!
திருப்பூர் மாவட்டம், அணைப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே 2 இளைஞர்களின் சடலங்கள் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்தது. பின்னர் அங்கு சென்ற போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த வாலிபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்தனர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன், விஜய் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருப்பூரில் தங்கி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ரயில் தண்டவாளம் அருகே நின்று ரயில் வரும் போது செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது இவர்கள் மீது ரயில் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. செல்ஃபி எடுக்கும் போது ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”சர்வாதிகாரியாக செயல்படும் மோடியிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்” : அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!
-
நீட் தேர்வில் மோசடி : உதவிய தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி !
-
நாடாளுமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர துடிக்கும் ஒன்றிய அரசு : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
#சந்தேஷ்காளி : பெண்ணை மிரட்டி பாலியல் பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வைத்த பாஜக : வெளிவந்த வாக்குமூலம் !
-
முதலில் எய்ம்ஸ், இப்பொது சென்னை மெட்ரோ : தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு !