Tamilnadu
“3 நாடுகளில் கையாளும் முறை.. சென்னையில் வேஸ்ட் எனர்ஜி திட்டம்” - மேயர் பிரியா சொன்ன அசத்தல் அறிவிப்பு!
திடக்கழிவு மேலாண்மையை கையாளும் முறை குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பிரான்ஸ் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை கையாளுவது மிகவும் சவாலான பணியாக உள்ளது. சென்னையில் திருக்கழிவு மேலாண்மையின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், திருக்கழிவு மேலாண்மையை கையாளும் முறை குறித்து ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாட்டுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தோம். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு முறையில் திடக்கழிவு மேலாண்மை கையாளப்படுகிறது. இத்தாலி நாட்டில் பிளாஸ்டிக்'கை கையால தனி பிளாண்ட் ஒன்றை உருவாக்கி அதனை கையாண்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி பொருத்தவரையில் பிளாஸ்டிக் ஒரு சவாலான விஷயமாக உள்ளது. இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து, இத்தாலி நாட்டில் பயன்படுத்தும் முறையை இங்கு செயல்படுத்தலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஸ்பெயின் நாட்டில் குப்பைகளை எடுக்கும் பொழுதே அந்த லாரிகளில் பிளாஸ்டிக் ஆர்கானிக் என பல வித குப்பைகள் பிரிக்கப்படுகிறது. அதுபோல சென்னை மாநகராட்சியிலும் செயல்படுத்த முடியுமா என ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கையாளப்படும் தொழில் நுட்பம் சார்ந்த திட்டங்களை சென்னையிலும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் சென்னையில் இரண்டு பயோ சி.என்.ஜி ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் கோயம்பேட்டில் 2 மற்றும் சோளிங்கநல்லூரில் 2 என மொத்தம் 4 புதிய ஃபயோ சி.என்.ஜி நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை கொடுங்கையூரில் புதிதாக வேஸ்ட் எனர்ஜி பிளாண்ட் உருவாக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!