Tamilnadu
சென்னையில் எப்போது மழை நிற்கும்?.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் முடிந்தும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெப்பத்தைத் தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இரவு நேரங்களில் கூட தூக்கம் இல்லாமல் வெப்பத்தால் வேதனையடைந்தனர்.
இந்நிலையில் ஜூன் 18ம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் பேடி நேற்று காலையிலிருந்தே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
இதன் காரணமாகச் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழ்நாட்டில் மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது மழை பெய்து தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் மழையை ரசித்து வருகின்றனர்.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தரமணி ஆலந்தூரில் தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 10 செ.மீ., மேற்குத் தாம்பரம், குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ., கொரட்டூர், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தலா 8 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், பூவிருந்தவல்லி, தாம்பரத்தில் தலா 7 செ.மீ., அயனாவரம், சென்னை ஆட்சியர் அலுவலகம் பகுதியில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!