Tamilnadu
விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் எப்படி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!
தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் வீட்டில் நேற்று தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாகச் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடந்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் சோதனை நடத்தினர் .
சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை உறவினர், குடும்பத்தினரைக் கூட சந்திக்க விடவில்லை. தொடர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை அதிகாரிகள் கொடுத்து வந்தனர். இந்த சூழலில் சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யப்போவதாகவும், தங்களுடன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு வருமாறும் அதிகாரிகள் அழைத்தனர்.
பின்னர் முறையான அனுமதி, நோட்டீஸ் எதுவும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி அறிந்த உடனே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசமுடியாத நிலையிலிருந்துள்ளார்.
இதையடுத்து அவருக்குத் தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவருக்கு இருதய இரத்த நாள பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது.
பிறகு உடனே அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் ESI மருத்துவர்களும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்துள்ளனர்.
இவர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!