Tamilnadu
திடீரென பற்றி எரிந்த வீடு.. 4 பேரின் உயிரை பத்திரமாக மீட்ட போலிஸார்: அதிகாலையில் நடந்தது என்ன?
சென்னை அசோக் நகர் வாசுதேவ புரத்தில் முகுந்தன் என்பவர் தனது குடும்பத்தாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது.
இதனால் வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. இதைப்பார்த்த அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் உடனே போலிஸாருக் தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு விரைந்து வந்த அசோக் நகர் போலிஸார் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற அசோக் நகர் போலிஸார் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே மிகவும் துரிதமாகச் செயல்பட்டு முதல் மாடியிலிருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டுக்குள் இருந்த 4 பேரையும் மீட்டனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த கட்டில் மெத்தை மற்றும் தளவாட சாமான்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே அசோக் நகர் போலிஸார் மிகவும் துரிதமாகச் செயல்பட்டு வீட்டினுள் இருந்த நான்கு பேரையும் உயிருடன் பத்திரமாக அமைப்பதற்கு உயர் அதிகாரிகள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!