Tamilnadu
திடீரென பற்றி எரிந்த வீடு.. 4 பேரின் உயிரை பத்திரமாக மீட்ட போலிஸார்: அதிகாலையில் நடந்தது என்ன?
சென்னை அசோக் நகர் வாசுதேவ புரத்தில் முகுந்தன் என்பவர் தனது குடும்பத்தாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது.
இதனால் வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. இதைப்பார்த்த அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் உடனே போலிஸாருக் தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு விரைந்து வந்த அசோக் நகர் போலிஸார் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற அசோக் நகர் போலிஸார் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே மிகவும் துரிதமாகச் செயல்பட்டு முதல் மாடியிலிருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டுக்குள் இருந்த 4 பேரையும் மீட்டனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த கட்டில் மெத்தை மற்றும் தளவாட சாமான்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே அசோக் நகர் போலிஸார் மிகவும் துரிதமாகச் செயல்பட்டு வீட்டினுள் இருந்த நான்கு பேரையும் உயிருடன் பத்திரமாக அமைப்பதற்கு உயர் அதிகாரிகள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!