Tamilnadu
திடீரென பற்றி எரிந்த வீடு.. 4 பேரின் உயிரை பத்திரமாக மீட்ட போலிஸார்: அதிகாலையில் நடந்தது என்ன?
சென்னை அசோக் நகர் வாசுதேவ புரத்தில் முகுந்தன் என்பவர் தனது குடும்பத்தாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது.
இதனால் வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. இதைப்பார்த்த அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் உடனே போலிஸாருக் தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு விரைந்து வந்த அசோக் நகர் போலிஸார் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற அசோக் நகர் போலிஸார் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே மிகவும் துரிதமாகச் செயல்பட்டு முதல் மாடியிலிருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டுக்குள் இருந்த 4 பேரையும் மீட்டனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த கட்டில் மெத்தை மற்றும் தளவாட சாமான்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே அசோக் நகர் போலிஸார் மிகவும் துரிதமாகச் செயல்பட்டு வீட்டினுள் இருந்த நான்கு பேரையும் உயிருடன் பத்திரமாக அமைப்பதற்கு உயர் அதிகாரிகள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!