Tamilnadu
கொதிக்கும் தண்ணீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தை.. கதறி அழுத தாய்: சோகத்தில் குடும்பம்!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும், பிறந்த ஆறு மாதமேயான பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று தாய் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். பிறகு கொதிக்கும் தண்ணீரை எடுத்து வீட்டின் கழிவறையில் உள்ள பாத்திரத்தில் ஊற்றியுள்ளார்.
பிறகு வீட்டின் முன் கதவை அடைப்பதற்காகக் கழிவறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது கழிவறையிலிருந்த குழந்தை ரித்திகா கொதித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். பிறகு குழந்தையை மீட்டு அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இங்குக் குழந்தை ரித்திகா சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொதிக்கும் தண்ணீரில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!