Tamilnadu
அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று
தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆலையை உடனே மூடவேண்டும் என வலியுறுத்தி 2018ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் பலியான 13 பேரில் புகைப்படங்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்களின் அஞ்சலிகளைச் செலுத்தினார்கள் இதுபோல் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில்அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தூத்துக்குடி நகர் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?