Tamilnadu
நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி.. 'சதுரங்க வேட்டை' படம் பாணியில் நூதன மோசடி: போலிஸிடம் சிக்கிய 4 பேர்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சந்தேகம் படும்படி சிலர் தங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த விடுதியில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு அறையில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள், செம்பு கலசங்கள், கருப்பு நிற அரிசி, போலியான அடையாள அட்டைகள் மற்றும் கண்ணாடிகள் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த அறையிலிருந்த பெங்களூருவைச் சேர்ந்த சூர்யா, குபாய்ப், ஜித்து, இர்சாத் ஆகிய 4 பேரிடம் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவில் வெளிவந்துள்ளது. இந்த கும்பல் சதுரங்க வேட்டை படத்தில் வருவதைப் போன்று மக்களிடத்தில் ஆசையைத் தூண்டி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், தங்களிடம் பெண்களை நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி உள்ளது. அதன் விலை ரூ.1 கோடி என கூறி ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து 4 பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!