Tamilnadu
நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி.. 'சதுரங்க வேட்டை' படம் பாணியில் நூதன மோசடி: போலிஸிடம் சிக்கிய 4 பேர்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சந்தேகம் படும்படி சிலர் தங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த விடுதியில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு அறையில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள், செம்பு கலசங்கள், கருப்பு நிற அரிசி, போலியான அடையாள அட்டைகள் மற்றும் கண்ணாடிகள் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த அறையிலிருந்த பெங்களூருவைச் சேர்ந்த சூர்யா, குபாய்ப், ஜித்து, இர்சாத் ஆகிய 4 பேரிடம் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவில் வெளிவந்துள்ளது. இந்த கும்பல் சதுரங்க வேட்டை படத்தில் வருவதைப் போன்று மக்களிடத்தில் ஆசையைத் தூண்டி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், தங்களிடம் பெண்களை நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி உள்ளது. அதன் விலை ரூ.1 கோடி என கூறி ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து 4 பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கலைஞரை பற்றிப் பேச பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“ஆணவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி” : தேர்தல் பரப்புரையில் கனிமொழி விமர்சனம்!
-
தமிழ்நாடெங்கும் ஹிட்: ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" இணையத்தில் வைரல்!
-
51-ஆ அல்லது 52-ஆ? : சொந்த வயதைக் கூட சரியாகக் குறிப்பிடாத விஜய்!
-
2026 தேர்தல் : திமுக கூட்டணியில் களமிறங்கும் 28 பேர்.. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் உள்ளே!