Tamilnadu
நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி.. 'சதுரங்க வேட்டை' படம் பாணியில் நூதன மோசடி: போலிஸிடம் சிக்கிய 4 பேர்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் சந்தேகம் படும்படி சிலர் தங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த விடுதியில் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு அறையில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள், செம்பு கலசங்கள், கருப்பு நிற அரிசி, போலியான அடையாள அட்டைகள் மற்றும் கண்ணாடிகள் இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அந்த அறையிலிருந்த பெங்களூருவைச் சேர்ந்த சூர்யா, குபாய்ப், ஜித்து, இர்சாத் ஆகிய 4 பேரிடம் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவில் வெளிவந்துள்ளது. இந்த கும்பல் சதுரங்க வேட்டை படத்தில் வருவதைப் போன்று மக்களிடத்தில் ஆசையைத் தூண்டி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், தங்களிடம் பெண்களை நிர்வாணமாகக் காட்டும் கண்ணாடி உள்ளது. அதன் விலை ரூ.1 கோடி என கூறி ரூ.10 லட்சம் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து 4 பேரிடமும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!