Tamilnadu
சேரை தூக்கி வீசி ரகளை.. அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு - கைகலப்பில் முடிந்த பா.ஜ.க கூட்டம்!
ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் திருமண மஹால் ஒன்றில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிதாக மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட தரணி முருகேசன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முரளிதரன் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் நிர்வாகிகள் வெளியேறும் சமயத்தில், பழைய மாவட்ட தலைவர் கதிரவனின் ஆதரவாளரான பாலா என்கிற சேட்டை பாலா திடீரென புகுந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது சேர்கள் தூக்கி வீசப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதட்டம் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் பத்திரமாக பாதுகாப்பாக கார்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது வாசலுக்கு வந்த அந்த சேட்டை பாலா வாகனங்களில் சென்றவர்களை நோக்கி கடுமையான வார்த்தைகளால் திட்டி விமர்சித்தார்.
அதனை தொடர்ந்து அங்கிருந்த போலிஸார் பாலாவை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பாஜகவின் இந்த ரகளையால் அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!