Tamilnadu
லாரி மீது மோதிய இருசக்கர வாகனம்.. திருமணத்திற்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் மணமகனுக்கு நடந்த துயரம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சிறு வஞ்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இளைஞரான இவர் சென்னை திருவேற்காடு அருகே புகைப்பட கலைஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மோகன்ராஜுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் மோகன்ராஜ், திருமண ஏற்பாட்டிற்காகத் தனது வருங்கால மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்
அப்போது, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற லாரி திடீரென திடீரென பிரேக் பிடித்து நின்றுள்ளது. இதனால் மோகன்ராஜின் இருசக்கர வாகனம் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் நிலையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெண் வீட்டார் மற்றும் மணமகனின் குடும்ப உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தறிகெட்டு அராஜகம் செய்யும் த.வெ.க.வினர்...” - பட்டியலிட்டு Part 2-வை வெளியிட்ட முரசொலி!
-
Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது : அனிதா ராதாகிருஷ்ணன் கைது - எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!
-
“வைகை மீது ஆளுநருக்கு என்ன திடீர் அக்கறை.. தமிழ்நாடு அரசே விழித்துக்கொள்” : கி.வீரமணி எச்சரிக்கை!
-
“கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட்” : ஆர்.எஸ்.பாரதி அதிரடி - முழு பேட்டி இங்கே!
-
“அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. போலீஸ் ராஜ்ஜியம்.. இந்த ஆணவம் அழிவிற்கு வழி”: மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!