Tamilnadu
குடும்ப விழாவிற்கு அழைத்த உரிமையாளர்.. சீர் வரிசையோடு வந்து அசத்திய வடமாநில தொழிலாளர்களால் நெகிழ்ச்சி !
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக வட மாநில தொழிலாளிகள் தாக்கப்படுவதாக கொல்லப்படுவதாக வதந்திகள் பரவி வருகிறது. குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பாஜகவினர் திட்டமிட்டு செய்திகள் பரப்பி வந்தனர்.
இதனை நம்பிய வட மாநில ஊடகங்கள் உண்மையை ஆய்வு செய்யாமல் போலியான செய்திகளை வெளியிட்டன. பாஜகவினரின் இந்த திட்டமிட்ட காழ்ப்புணர்ச்சி காரணமான இந்த செயல் மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கும் நட்புறவை கெடுக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து இந்த செய்திகள் பரவி வந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மேலும் பீகார் மாநில அதிகாரிகளும், தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்பட்ட வதந்திகளை, தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களே பொய் என்று கூறினர். மேலும் இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், தாங்கள் எந்த வித தாக்குதல்களுக்கும் உள்ளாகவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக வட மாநில தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டின் நிகழ்ச்சி ஒன்றுக்கு குடும்பத்தார் போல் சீர்வரிசையோடு சென்றுள்ளது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜாமணி - பத்மாவதி தம்பதியினர். கட்டுமான கட்டுமான நிறுவன உரிமையாளராக இருக்கும் ராஜாமணியிடம் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் அன்பாக பழகி வருகிறார் ராஜாமணி.
இந்த நிலையில் ராஜாமணியின் மகளான விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உறவினர்கள், குடும்பத்தார் என அனைவரையும் அழைத்த ராஜாமணி, தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களையும் அழைத்தார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த அவர்கள் வெறும் கையோடு வராமல் சீர் வரிசையோடு வந்தனர்.
அதில் வாழைத்தார், பழங்கள், தேங்காய், பூ, பரிசு என பலவற்றை சீராக கொண்டு வந்து அசத்தினர். தொடர்ந்து அவர்கள் உரிமையாளர் மகளுக்கு நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்து குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!